Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஹூலா ஹூப் விளையாட்டில் தீக்ஷிதா கின்னஸ் சாதனை!

ஜுலை 30, 2022 05:56

ஹூலா ஹூப் எனும் சாகச விளை யாட்டை  பலரும் உடற்பயிற்சி சார்ந்தும், பொழுது போக்கு நோக்குடன் செய்வதுண்டு. அதாவது வட்ட வடிவ வளையத்தை உடலுக் குள் நுழைத்து இடுப்பை வளைந்து ஆடுவது தான் இந்த  ஹூலா ஹூப் விளையாட்டு.  

இந்த விளையாட்டில் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த 12 வயதான மாணவி தீக்‌ஷிதா சுப்பிரமணி  ஏராளமான உலக சாதனைகளை நிகழ்த்தி பலரையும் ஆச் சரியத்தில் ஆழ்த்திருக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் ஒரு நிமிடத்தில் ஹூலா ஹூப்பை தனது காலில் 207 முறை சுழற்றி கின்னஸ் சாதனை படைத்தார். 2021-ம் ஆண்டு முழங்கால்களைச் சுற்றி அதிக முறை ஹூலா ஹூப் சுழற்சி செய்ததாக மற்றொரு கின்னஸ் சாதனை படைத்தார்.

ஜிம்னாஸ்டிக்ஸ் ஆர்வலரான இவர், இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் பியூச்சர் கலாமின் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் போன்றவற்றிலும் இடம் பிடித்துள்ளார். கொரோனா காலகட்டம்தான் இத்தகைய சாதனை அங்கீகாரங்களை பெறுவதற்கு அடித் தளம் அமைத்து கொடுத்திருக்கிறது. யூடியூப் வீடியோக்களை பார்த்து அவற்றின் உதவியுடனேயே பயிற்சி செய்ய தொடங்கி இருக்கிறார். கொரோனா முதல் அலையின் போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது ஆன்லைன் வழியாக ஹூலா ஹூப் வகுப்பு களில் பங்கேற்றிருக்கிறார். 

இதனை அங்கீகரிக்கும் விதமாக, யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட்ஸின் நிறுவனர் டாக்டர் பாபு பாலகிருஷ்ணன் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி, சிறுமி தீக்-ஷிதாவை கௌர வித்தார். ஏற்கனவே ஹூலா ஹூப்(HULA HOOP)  வளையத்தை ஒரு நிமிடத்தில் 235 முறை சுற்றி, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் தீக்-ஷிதா இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தீக்‌ஷிதா சுப்பிரமணி கூறும் போது,  ஹூலா ஹூப் விளையாட்டில் கின்னஸ் உலக சாதனை படைப்பது சவாலா னது. நானும் எனது பயிற்சியாளர் விஜயலட்சுமி யும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் உள்ள பல்வேறு பதிவுகளை ஆராய்ந்து, எனது திறமைக்கு ஏற்ற பிரிவை தேர்ந்தெடுத்தோம். 

பின்பு 'ஸ்டாப்வாட்ச்'களுடன் அதிவே கமாக செய்வதற்கு பயிற்சி பெற்றேன். அதிக சுழற்சி எண்ணிக்கையை இலக்காக நிர்ணயித்து செயல்பட்டேன். தொழில்முறை புகைப்படக் கலைஞர்களைப் பயன்படுத்தி நான் மேற் கொண்ட பயிற்சிகளை பல கோணங்களில் வீடியோவாக பதிவுசெய்து, ஆவணங்களுடன் கின்னஸ் இணையதளத்தில் பதிவேற்றினோம். கின்னஸ் குழுவினர் ஆதாரங்களை ஆய்வு செய்து எனது முயற்சிக்கு ஒப்புதல் அளித்தனர்'' என்றார்.

தீக்‌ஷிதாவின் தந்தை சுப்பிரமணி கூறும் போது, இந்தியாவில், ஹூலா ஹூப் விளை யாட்டு இன்னும் வழக்கத்திற்கு மாறான செயலாகவே பார்க்கப்படுகிறது என்று வேதனையோடு சொல்கிறார், தீக்‌ஷிதாவின் தந்தை சுப்பிரமணி. கேரளாவில் சிறிய இடத் தில் வசிக்கும் நாங்கள் நல்ல பயிற்சியா ளரைக் கண்டுபிடிக்க மிகவும் போராடினோம். 
எங்கள் பகுதியில் ஹூலா ஹூப்பைப் பற்றி பேசினால், ப

லருக்கும் அது என்னவென்று தெரியாது. இருப்பினும், தீக்ஷிதாவின் ஆர் வத்தை பார்த்து அவளை ஊக்கப்படுத்தினோம். அவளுக்காக எல்லா அளவுகளிலும் வளையங் களை வாங்கினோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவளிடம் ஓரிரு வளையங்கள்தான் இருந்தது. இப்போது வெவ்வேறு அளவுகள் மற்றும் எடைகள் கொண்ட 18 வளையங்கள் உள்ளன. ஒலிம்பிக்கில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பார் என்று நாங்கள் நம்பு கிறோம் என்று கூறினார். 
 

தலைப்புச்செய்திகள்